Monday, July 4, 2011

இவரின் ஓவியத்தைப்பார்தது அன்று ஹிட்லர் இது என்ன பைத்தியக்காரத்தனம் என்றார் ஆனால்!!

இன்று நவீன ஒவியங்களின் பிரமா என்று வர்ணிகக கூடிய இவரைத் தெரியதவர்கள் யாருமே இருக்க முடியாது அவர் தான் பிக்காஸோ. பிக்காஸோவின் உலகம் தழுவிய புகழுக்கு என்ன காரணம்.ஓவியம் இப்படித்தான் இருக்வேண்டும் என்ற வரையரையைத் தகர்தெரிந்தார்.

Pablo Picasso

இக்காலப்பகுதியில் தொழில்நுட்பப் புரட்சியினால் கமராவும் தோற்றம் பெற்றது ஒவியர்கள் செய்யும் வேலையை குறிப்பிட்ட நிமிடங்களில் செய்து முடித்தது இதனால் வேலையில்லாப் பிரச்சனை தலை தூக்கியது என்னசெய்வது என்று தெரியாமல் இருந்த ஒவியர்களுக்கு புதிய பாதையை திறந்து வைத்தார்

Dimentition மட்டும் வரைந்து கொண்டிருந்தார்கள் ஆழம் கொடுத்து Three Dimentition Effect  கொடுக்க ஓவியக்கலை ஒரு மிகப்பொரிய மாற்றம் அடைந்தது இவர்கள் வாழ்ந்து மறைந்து பல நூற்றாண்டுகள் ஆண பிறகும் ஓவியக்கலைக்கு யாராலும் ஒரு மாற்றத்தையோ அல்லது திருப்பத்தையோ கொடுக்க முடியவில்லை ஓவியக்கலை தனது முக்கியத்துவத்தை இழந்து விடுமோ என்ற அச்சம் முளைவிட ஆரம்பித்தது அந்த சமயம் 1907ம் ஆண்டு பிக்காஸோ வரைந்த னுநஅழளைநளநடடநள ன’யுஎபைழெn என்ற ஐந்து பெண்களின் ஓவியம் ஓவியக் கலைக்கு ஒரு மிகப்பெரிய திருப்பு முனையைக் கொடுத்தது
ஒரு காட்சியை கண்கள் எப்படிப் பார்கின்றதோ அதை அதே மாதிரி வரைவதில் என்ன புதுமை இருக்கிறது அந்த காட்சி மனதில் ஏற்படுத்தும் உணர்சிகளைத்தான் ஒவியம் பிரதிபலிக்க வேண்டும் -இது பிக்கஸோவின் கருத்து இந்த அடிப்படையிலேயே ஒவியங்களை வரைந்தார்
இவரின் இந்த புதிய முயற்சியை எடுத்த எடுப்பிலேயே சிவப்புக்கம்பளம் விரித்து ஏற்றுக் கொள்ள வில்லை. பலமான எதிர்ப்புக்கள் கிளம்பின அதே ஆதரவுக் கைதட்டல்களும் எழுந்தன.கம்பரின் பாடல்களுக்கு ஆளுக்கு; ஒரு அர்த்தம் சொல்வது போல பிக்காஸோவின் இந்த ஒவியத்தை பாராட்டியவர்கள் ஒவ்வொரு புது அர்தம் சொன்னார்கள்”எந்த ஒவியமாக இருந்தாலும் சரி அதுக்கு ஒரேயொரு அர்த்தம் தான் இருக்கு அந்த அர்த்தம் அந்த ஓவியர் கொடுத்த அர்த்தம் மட்டுமே
பிக்காஸோ இதே பாணியில் தொடர்ந்து ஒவியங்களை வரைய ஆரம்பித்தார் உலகம் இந்த ஸ்டைலுக்கு cubism என்று பெயர் பெயர் கொடுத்தது ஜியோமெண்டரியன் கோட்பாடுகளைப் பிரதிபலிக்கும் இந்த ஒவியக்கலை பின் ரொக்கட் வேகத்தில் வளர்ந்தது யோன அந்த காலப்பகுதியில் (சென்ற நூற்றான்டில்) வியக்கத்தக்க விஞ்ஞானி ஆல்பாட் ஐன்டின் பிக்காஸோ ரசிகராக மாறினார்
பிக்காஸோ அறிமுகப்படுத்திய இந்த style ஓவியம் காகிதத்தோடு நின்று விட வில்லை பிற்காலத்தில் இலத்திரனியல் பொருட்கள் செய்வதற்க்கு அது தான் அடிப்படையாக இருந்தது க்யுபிசம் என்ற modern art தான் பிக்காஸோவுக்கு புகழ் சேர்த்தது என்றாலும் மரபு ஒவியங்களை வரைவதிலும் இவர் வல்லவராக இருந்தார் அது மட்டுமல்ல வான் கா ஆரம்பித்து வைத்த Expressionims ல் ஆரம்பித்து  surrealism வரை அத்தனை style  களிலும் நிபுனத்துவம் வாய்ந்தவராக இருந்தார் .சிற்ப்பம் மேடை டிசைனர் என்று ஆரம்பித்து நாடக நடகர்களுக்கு costuemed  வரை இவர் பல விஷயங்களைச் செய்வதில் கைதேந்தவர்
பிக்காஸோ பிறந்து ஸ்பெயின் நாட்டில் என்றாலும் அவர் வாழ்கையின் பெரும்பகுதியைச் செலவிட்டது கலைகளின் தலைநகரான பாரீஸ் தனது குடிமகனாக மாறச்சொல்லி பிரான்ஸ் பல முறை பிக்காஸோவைக்கேட்டுக் கொண்டது ஆனால் தனது நாட்டின் மீது கொண்ட பற்றால் கடைசிவரை அவர் தனது குடியுரிமையை மாற்றிக் கொள்ளவில்லை
1937 ம் ஆண்டு இரண்டாம் உலகப் போர் அசுரவேகத்தில் நெருங்கிக் கொண்டிருந்த சமயம்
சின்ன வயதில் ஒவியனாக வேண்டும் என்ற கனவுகளோடு வளர்ந்த ஹிட்லர் இது என்ன modern art பைத்தியகாரன் கிறுக்கிய மாதிரி இருக்கு என்று பிக்காஸோவின் ஒவியங்களைத் தடைசெய்தார்
இன்னாரு பக்கம் பிக்காஸோ தாய்நாடான ஸ்பெயின் நாட்டில் உள்நாடடுப் போர் முளைவிட ஆரம்பித்தது இடையில் முக்கை நுழைத்த ஹிட்லர் ஸ்பெயின் நாட்டின் குவர்னிக்கா நகர் மீது குண்டு மழை பொழிந்தார் இதில் அந் நாட்டின் கட்டிடங்கள் எல்லாம் செங்கல் குவியலாக மாறின.அந் நகரே மரண ஒலம் மூடிக்கொண்டது.எங்கு அழுகுரல் இரத்த வெள்ளம்
இதனை பார்த்த பிக்காஸோ உயnஎயள க்கு இடம் பெயர்த்தார் இறந்து போனவர்களுக்காக தீட்டப்பட்ட அந்த ஓவியம் இறவாப்புகழ் பெற்றது பிறகு ஹிட்லரின் நாஜியிஸத்தை எதிர்க்கும் சின்னமாகவே மாறியது
இரண்டாம் உலகப்போர் முடிவை நோக்கி நெருங்கிக் கொன்டிருந்த சமயம் பிக்காஸோ பிரான்ஸ் நாட்டின் கம்னியுசியத்தில் சோந்தார்
ஆமைதி சம்மந்தமாக அந்தக் கட்சி நடத்திய பல சர்வதேச கூட்டங்களில் கலந்து கொண்டார் 1950 ஆண்டு நடத்தப்பட்ட அமைதி மாநாட்டுக்காக அவர் அமைதியை புறவுருவமாகக் கொண்டு ஒர் அடையாள ஒவியம் உருவாக்க அதை மொத்த உலகமும் அமைதியின் சின்னமாக ஏற்றுக் கொண்டது.
ஆரம்ப காலங்களில் ஓவியங்களை அகலம் நீளம் என்ற எல்லைகளுக்குள் மட்டும் அதாவது
 
picasso_majolie

picasso-avignon-reduce

Picasso-Guernica

No comments:

Post a Comment