Tuesday, July 5, 2011

புனரமைக்கப்படும் யாழ்பாணக் கோட்டை..


யாழ்ப்பாணக் கோட்டையை புதுப்பிக்கும் செயற்திட்டத்திற்கு 104 மில்லியன் ரூபா செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

1618 ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்தைக் கைப்பற்றிய போர்த்துக்கீஸர் இந்தக் கோட்டையை அமைத்தனர். அதன்பின்னர் 1658 இல் யாழ்ப்பாணத்தைக் கைப்பற்றிய ஒல்லாந்தர் இக்கோட்டையை மேலும் விஸ்தரித்து புனரமைத்தனர்.அதற்குப்பின்னர் இப்போது புனரமைப்புப்பணி நடைபெற்றுக் கொன்டிருக்கின்றது இந்தப்புனரமைப்புப் பணியானது 2010 ஆண்டு நவம்பர் மாதத்திற்க்குள் முடிவடையும் என தொல்பொருள் ஆய்வியல்துறையினர் தெரிவித்துள்ளனர்.