Wednesday, July 13, 2011

மனித மிருகம் (இட அமின்)


இட அமின் -உச்சரிக்கும் பேதே நம்மை உலுக்கிப் போடுகிற பெயர் !முந்நூறு பவுண்டு எடையுடன் ஆரடி முன்று அங்குல உயரமான ராட்சதன்  மாதிரி தோற்றமளித்த இவர் மூன்று லட்சம் பேரைக் கொன்று குவித்தவர்.நீர்யானையின் கல்லீரலிலிந்து மனித மாமிசம் வரை இவர் சாப்பிட்டிருக்கிறார் என்று இவருடன் நெருங்கிப் பழகிய ராணுவ அதிகாரிகள் வாக்குமூலம் கொடுத்திறுக்கிறார்கள்.பாலியல் நோய் வரும் அளவுக்கு பல பெண்களோடு பொட்டம் அடித்தவர் .நடு ரோட்டில் நிர்வாணமாக ஓடியவர் என்ற பெருமையும்  இடி அமீனுக்கு உண்டு இடி அமீன் ராணுவத்தில் பணியாற்றிய சமயம் சக ராணுவ வீரனின் மனைவியோடு உல்லாசமாக இருந்தபோது கையும் களவுமாக பிடிபட மேலே சொன்ன சம்பவம் இடம் பெற்றது.அதிகார வெறி இவரை ஆட்டிப்படைத்தது ராணுவத்தில் சமையல் காரனாக இருந்த இடி அமீனுக்கு முக்கிய பொறுப்புக்களும் பதவி உயர்வும் பொடுத்து நாட்டின் தளபதி பதவிக்கு உயர்தியவர் ஜனாதிபதி மில்டன் ஓபோட்.
வுளர்த்த கடா மார்பில் பாய்வது பொல அவரையே .இவர் இரத்தம் தெறிக்க ராணுவப் புரட்சி நடத்தி ஆட்சியினை விட்டு விரட்டினார்.இது  நடந்தது 1971ம் ஆண்டு!இடி அமீன் வீழ்த்pய ஜனாதிபதி சோஷலிஸ் சித்தாந்தத்தின் பக்கம் சாயக்கூடியவர் என்ற சந்தேகம் இருந்தால் அமெரிக்காவும் இங்கிலாந்தும் கூட அப்போது இடி அமீனை ஆதரித்தன
எழுதப்படிக்ககூடத் தெரியாத இடி அமீன் கைகளுக்கு உகன்டாவின் தலையெழுத்தையே எழுதக்கூடிய அதிகாரம் கிடைத்த போது அவர் அடித்த கொட்டங்களுக்கு அளவே இல்லை உழஅஅநnஎநடவா நாடுகளின் தலைவன் இங்கிலாந்தை வென்ற வீரன் ஸ்கொட்லாந்தின் கடைசி மன்னன்..டாக்டர் என்று வாய்க்கு வந்த பட்டங்களை எல்லாம் அவர் தனக்குத் தானே வழங்கிக் கொண்டார். தனது அகலமான மார்பே மறையும் அளவுக்கு ராணுவத்தின் எத்தனை பதக்கங்கள் உண்டோ அத்தனையும் எடுத்துச் சட்டையில் குத்திக் கொண்டார்!
துன்னைப்போல எழுதப்படிக்கத் தெரியாதவர்களைNயு அமைச்சர்களாகவும் ராணுவ உயர்அதிகாரிகளாகவும் நியமித்தார் அடுத்தடுத்து நாட்டின் பொருளாதாரமும் நிர்வாகமும் சீர்குலைந்தன .நாட்டு மக்கள் இடி அமீனுக்கு எதிராகப் போர்க் கொடி தூக்குமு; நிலை உரு வெடுத்தது
ஊகண்டா நாட்டில் இருக்கும் கிறிஸ்தவர்களுக்கு எதிராக வன்முறையைத் தூண்டினார்.இதில் கிறிஸ்தவ மத ஆர்ச்பிஷப் உட்பட பல்லாயிரம் பேர் படுபொலை செய்யப்பட்டனர் .தனது கைகளில் இருந்து ஆட்சி நழுவி வீடுமோ என்ற பயம் இடிஅமினுக்கு வர ..அவரது கொலைவெறி அதிகமாகியது தன்னை எதிர்த்துப் பேசிய காபினெட் அமைச்சர் களையே அவர் கொன்றார் அதிகார வாழ்கையிலும் அவர் பொலைவெறியுடன் தான் இருந்தான்

அன்று போல்பார்டின் வெறியாட்டம்! (தொடர்சியான வெறியாட்டத்தில்)

Pol pot
ஆட்சியாளன் நல்லவனாக இருந்தால் அவன் இறந்ததும் மக்கள் சோகத்தில் மூழ்கிப்போவர்கள் கொடுங்கோலனாக இருந்தால் நின்மதிப் பெருமூச்சு விடுவார்கள் ஆனால் கம்போடிய மக்கள் ஆத்திரப்பட்டார்கள் அவர் இறந்தாலும் பரவாயில்லை அவர் பிணத்தையாவது தூக்கில் போடுவோம் !என்று கொதித்து தெழுந்தார்கள் அந்த அளவுக்கு பொடுங்கோளன் போல்பாட்
போல்பாட்டுக்கு சீனாவின் மாசேதுங்தான் மானசீக குரு! 1975 லிருந்து 1979 ம் ஆண்டு வரை போல்பார்டின் ஆட்சியின் கீழ் கம்போடியா இருந்தது. ஏழை –பணக்காரன் என்ற வர்க்க வேறுபாடு இல்லாத ஆதர்ச நாட்டை உருவாக்கப் போகிறேன் என்று சொல்லி போல்பாட் ஆடிய வெறியாட்டத்தைப்பார்த்து கம்போடியா மக்களின் முதுகெலும்பு சில்லிட்டுப் போனது
கும்போடியா விவசாய நாடு இந்த நாட்டுக்குத்தேவை நிலத்தில் இறங்கி கடுமையாக வேலை செய்யக்கூடிய உழைப்பாளிகளே தவிர சட்டையின் மடிப்பு கலையாமல் வேலை செய்யும் அரச ஊழியர்களோ வியாபரிகளோ ஆசிரியர்களோ இல்லை “..என்று அத்தனை பெயரையும் துப்பாக்கி முனையில் வயர்காடுகளை  நோக்கி ஓட ஓட விரட்டினார் போல்பாட்
வீடு சொத்து சுகம் எல்லாவற்றையும் அப்படி அப்படியே விட்டுவிட்டு ஆண்-பெண் குழந்தைகள் என்று அத்தனை பேரும் ஓடினார்கள் கிராமங்களுக்கு குடி பெயர மறுத்தவர்களை போல்பாட்டின் படையினர் ஈவு இரக்கமே இல்லாமல் சுட்டுக் கொன்றார்கள்  ஒவ்வொரு நகரமாகப் போன இந்த இயந்திரத்துப்பாக்கிப் படையினர் மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக படுத்திருந்த நோயாளிகளையும் கூட வயதானவர்களையும்கூகூட விட்டு வைக்கவில்லை ! அவர்களைத் தரதர வென்று இழுத்துவந்து வீதிகளில் போட்டுவிட்டு மருத்துவமனைகளையும் வெடிவைத்துத் தகர்த்தினார்கள் .பள்ளிக்கூடங்களில் படித்துக்கொன்டிருந்த பிஞ்சுக் குழந்தைகளையும் போல்பர்’டின் படைவிட்டு வைக்கவில்லை மக்களிடையே பீதியைக் கிளப்புவதற்காக குழந்தைகளின் இரண்டு கால்களையும் பிடித்து அரக்கத்தனமாக அவர்கள் கிழித்தெரிய மக்களுக்கு  பயத்தில் மூச்சுப் பேச்சே வரவில்லை !காகிதப்பணமே தேவையில்லாத ஒன்று என்று போல்பாட் சொல்ல கம்போடியாவின் எல்லா வங்கிகளையும் அவரது படையினர் தரைமட்டமாக்கினர்.தெருவில் பணம் மலைபோல் குவிக்கப்பட்டு கொளுத்தப்பட்டது

உலகசரித்ரத்தையே மாற்றியமைத்த ஹிட்லர்


ஹிட்லர் ஆரம்பித்துவைத்த இரண்டாம் உலகப்போர் காவு வாங்கியது எவ்வளவு உயிர்களைத் தெரியுமா சுமார் ஆறரைக் கோடி போ! இதில் மிகப்பெரிய சோகம் என்னவென்றால் இறந்தவர்களில் சுமார் ஜந்து கோடிப் பேர் எந்த வம்புக்கும் போகாத பொதுமக்கள்!
போரினால் இறந்தவர்களின் கதைகளைவிட ஹிட்லர் தன் நாட்டின் சொந்த மக்களுக்குச் செய்த இனப்படுகொலை பொடுமையானது.இதைப்பற்றி இப்போது கேட்hலும் ஈரக்குலை நடுக்கம் எடுக்கும்!
யூதர்களைத் துரோகிகள் என்று முத்திரை குத்திய ஹிட்லர் ஆடிய கொலை வெறி ஆட்டத்தைப் போல ஒரு பொடுமை உலக சரித்திரத்தில் இதுவரை நடந்தது இல்லை யூதர்களைக் கொலை செய்வதற்க்கு என்று தனி அமைச்சகம் யூத மக்களைக் கொலை செய்வதற்க்கு என்றே நாடு முழுவதும் மரணத் தொழிற்சாலைகள் ..நாள் ஒன்றுக்கு குறைந்த பட்சம் இரண்டாயிரம் யூதர்கலை கொன்று குழியில் வைக்கவேண்டும் என்று இலக்கு..இந்த மரணத் தொழிற்சாலைகளில் கொன்று குவிக்கப்படும் யூதர்களை நா{pப்படையினர் கனக்கு வைத்துக் கொள்ளும் முறை மிகவும் சவாரசியமானது கைதாகும் போதே யூதர்களின் கை அல்லது கால்களில் செப்பு வளையம் மாட்டப்படும் .பல சித்திரவதைகளுக்கு பிறக அவர்கள் கொல்லப்பட்டதும் பிணங்கள் மொத்தமாக ஒரிடத்தில் குவிக்கப்பட்டு கொளுத்தப்படும் .அவர்கள் சடலங்கள் சாம்பல் ஆனதும் சாம்பலில் இருந்து பிரித்தெடுக்கும் வலையங்களின் எண்ணிக்கையை வைத்து இன்று எத்தனை பேரைக் கொன்றோம் என்று நாஜிப்படை கணக்கு எழுதிக்கொல்லும் .நினைத்துப்பதத்க்கவே நடுக்கம் எடுக்கும் ஹிட்லரின் மிருகத்தனமான ஆட்சியில் இறந்து போன யூதர்களைவிட உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு கஷ்டப்பட்ட யூத மக்கள் பட்ட சித்திரவதை அதிகம்
சுரி ஹிட்லருக்கு யூத மக்கள் அப்படி என்னதான் துரோகம் செய்தார்கள்?
ஹிட்லர் தனது நாஜி கட்சியினரிடையே கேள்வி பதில் பாணியை ஆற்றிய இந்த உரையைக் கேளுங்கள்
“எனதருமை ஜெர்மன் நாட்டு மக்களே…முதல் உலகப்போரில் நாம் தோல்வி அடைந்தோம் .நம் வசம் இருந்த நிலப் பகுதிகளை இழந்தோம் எதிரி நாடுகளுக்கு போரில் ஏற்பட்ட இழப்புகளுக்கு நாம் பொறுப்பேற்றுக் கொண்டுஇருப்பது இப்போது அதற்க்கு நஷ்ட ஈடு பொடுக்கிறோம்!இந்தக் கடன் சுமை நமது வசதிகளைப் பறக்கின்றது !நமது தலைச்சுமையைக் கூட்டுகின்றது அத்தோடு இது நமது சுய கௌரவத்தின் மீது சகதி வாரி அடிக்கின்றது இதற்க்கு யார் காரணம்?
“ஆட்சி முறை!”இது ஹிட்லரினால் மூளைச்சலவை செய்யப்பட்ட கட்சியின் கோஷம்!
இந்த ஆட்சிக்கு பின்னனியில் இருப்பவர்கள் யார்?
“யூதர்கள்”
“இந்தத் துரோகிகளின் பிரச்சனைக்கு நாம் கடைசித் தீர்வு கன்டாக வேண்டும்”என்று ஹிட்லர் கட்டளையிட கட்சித் தொண்டர்கள் இனவெறிடும் கொலை வெறியுடன்
அந்த இடத்தை விட்டுப்புறப்படுவார்கள்
முனிதர்களைக் கொல்ல எத்தனை முறைகள் இருக்கின்றதோ அத்தனை முறைகளையும் ஹிட்லரின் படை யூதர்களைக் கொல்லக் கையான்டது !இதில் “காஸ சேம்பர்” முறை விசித்திரமானது பிடிபடும் யூதர்களை ஆடைகளை எல்லாம் கலையச்சொல்லி “போய் குளித்து வரச்சொல்லி நாஜிப்படை கட்டளை இடும்அதன் பின் இவர்களை ஒர் அறைக்குள் அனுப்புவார்கள் அத்தனை கதவுகளும் சார்த்தப்பட்டு விஷப்புகை திறந்து விடப்படும் அடுத்த சில நிமிடங்களில் குளியல் அறை பிண அறையக மாறியிருக்கும்
பிடிபடும் அத்தனை யூதர்களுக்குமே இது மாதிரி சுலபமான மரணம் கிடைத்து விடாது
சுண்டெலியை வைத்து சோதனை செய்வது போல யூதர்களை வைத்து பல மருத்துவ பரிசேதனைகள் நடத்தப்பட்டன!
ஜேர்மன் நாட்டில் வாழும் யூதர்கள் என்று இல்லாமல் தான் கைப்பெற்றும் நாடுகளில் வசிக்கும் யூதர்களையும் ஹிட்லரின் நாஜிப்படை கொன்று வெறியாட்டம் ஆடியது 1943ம் ஆண்டு வார்ஷா நகரில் நாஜிப்படைகளை எதிர்த்து கைதிகளாக பிடிபட்ட யூதர்கள் பொங்கி எழுந்தாளர்கள்!
இந்த சம்பவத்தில் நாஜிப்படையின் சிலர் கொல்லப்பட்டனர்  இதற்க்கு பதிலடியாக படையெடுத்துவந்த நாஜிப்படை 56000 யூதர்களை  ஒரே இடத்தில் வைத்து தீயிட்டு பொசுக்கியது 1945ம் ஆண்டு அமெரிக்கத் துருப்புகள் ஜெர்மனியில் காலடி எடுத்துவைத்த பிறகே யூத இனம் பட்ட அத்தனை அவஸ்தைகளும் உலகின் கண்களுக்கு முழுமையாக தெரியவந்தன.