Friday, July 15, 2011

ஆயுதம் ஏந்திய அமைச்சர்!

che guevara
ஆயுதம் ஏந்திய அமைச்சர்!
(அமைச்சராக இருந்த ஒருவர் மீண்டும் போராளியாக மாறி யுத்தம் செய்தார் என்றால் அது செகுவாரா மட்டும் தான்)

1965ம் ஆண்டு அது உலகத்தின் எந்தத மூலையாக இருந்தாலும் சரி..இரண்டு கம்யூனிஸ்ட்டுக்கள் சந்தித்துக் கொண்டால் அவர்கள் ஒருவரை ஒருவர் கேட்கும் முதல் கேள்வி இதுவாகத்ததான் இருந்தது - “அவர் எங்கே இருக்கிறார்?”
ஆவர் என்று அவர்கள் குறிப்பிட்டது செகுவாராவை!
யார் இவர்?செங்கொடிக்கும் அரிவாள் சுத்திக்கும் அடுத்தபடியாக கம்யூனிஸ்டுக்களின் சின்னமாகவே மாறியவர் இந்த செகுவாரா! கார்ல் மார்க்ஸ{ம் லெனினும் கவரத் தவறியவர்களைக் கூட செகுவரா ஆயுதம் ஏந்திய போராளி ! கம்யூனிஸ்ட் அரசாங்கம் மலர்வதற்க்கு அஸ்திவாரம் போட்டவரே இந்த செ குவாரா தான்
இத்தனைக்கும்  செகுவாரா அர்ஜென்டினாவின் செல்வச செழிப்புமிக்க குடும்பத்தில் பிறந்தவர் மருத்துவம் படித்த இவர் டாக்டர் தொழிலைச் செய்யவே முதலில் விரும்பினார்
ஆனால் காலம் அப்போது அவருக்கு வேறு பாடத்தை கற்றுத்தந்தது கௌதமாலா நடந்து வந்த ஒர் ஆட்சியை அமெரிக்க அரசாங்கம் தனது சுயநலத்துக்காக தூக்கியெறிந்தது இதைப்பார்த்து செ குவாரா துடித்தார்.தங்களின் அரசாங்கத்தை அமெரிக்கா தூக்கியெறிந்ததைப் பார்த்து துணுக்குறாத அந்த நாட்டு மக்களின் மௌனம் செ குவாரா மேலும் துடிக்கச் செய்தது அமெரிக்காவின் இந்த அடடூழியத்தை விரித்து செ குவாரா புரட்சி வெடிக்க பேச அவருக்கு ஆபத்து வந்தது செ குவாரா மெக்ஸி;கோவுக்கு தப்பி ஓடினார் அந்த சமயம் கியூபா நாட்டில் ஆட்சி செய்து வந்த பாடிஸ்டாவுக்கு எதிரான கொரிலாப்படை திரட்டி போராடுவதற்க்கு ஃபிடல் காஸ்டோவின் அறிமுகம் கிடைத்தது.முதல் சந்திப்பிலேயே பலமான நட்பு மலர்ந்தது இருவருக்கும்
காஸ்டோவின் தலைமைத் தளபதி ஆனார் செ குவாரா இவரின் வீரமும் கொரிலாப்படை சாகசங்களும் கியூபாவை சக்கரவர்தியை வீழ்த்தி காஸ்டோவின் கையில் ஆட்சிப்பொறுப்பை ஒப்படைத்தது இதன் பின் செ குவாரா கீயூபாவின் பொருளாதார அமைச்சராகினார் காஸ்ரோ. கியூபாவை பன்னெடும் காலமாக சுரண்டிவந்த அமெரிக்கா நிறுவனங்களின் உடைமைகளை இவர் பறிமுதல் செய்தார் கீயூபாவின் சுதந்திரத்துக்கு தன்னோடு போராடிய ஒரு கொரில்லா பெண் போராளியை மணந்து இரண்டு குழந்தைகளுக்கு அப்பாவானார்.இருந்தாலும் செ குவாராவால் அந்த வாழ்கையில் நீடிக்கமுடியவில்லை காரணம் அப்பொது காங்கோ நாட்டில் புரட்சியில் ஈடுபட்டிருந்த கொரிலாக்களுக்கு செ குவாராவின் வழிகாட்டுதல் தேவைப்பட்டது

இரும்புத் தலைவன் ! ஃபிடல் காஸ்டோ

fidel castro

(உலகம் மூன்றாம் உலகப் போரை நோக்கிப் போய்கொண்டிருக்கிறதோ? ஏன்று அச்சம் எழுந்தது)
நாற்பது வருடங்களாக ஒரு நாட்டைத் தொடர்ந்து தனது இரும்புப் பிடிக்குள் வைத்திருக்கும் ஒரு தலைவன் உண்டு என்றால் இன்றைய தேதிக்கு ஃபிடல் காஸ்டோ மட்டுமே !
காஸ்ரோவின் வாழ்கையில் பல விந்தையான விஷயங்கள் நடந்திருக்கின்றன தனது நாட்டைச் சுரண்டிக்கொண்டிருந்த சர்வதிகாரி பாடிஸ்டாவை எதிர்தது காஸ்ரோ கொரிலா போரில் ஈடுபட்டிருந்த சமயம் அவர் தன்னை ஒரு கம்யூனிஸ்ட் என்றே சொல்லிக்கொள்ள வில்லை கியூபாவில் ஃபிடல் காஸ்டோ ஆட்சிக்கு வந்த புதிதில் கியூபாவின் கம்னீயூஸ்ட் கட்சியே அவரை கடுமையாக எதிர்த்ததுஅப்படியென்றால் ஃபிடல் காஸ்டோவை திடீரென்று கம்யூனிஸ்ட் ஆக்கியது யார்? சோவியத் ரஷ்யாவா? இல்லை அமெரிக்கா! 
கீயூபாவில் ஃபிடல் காஸ்டோ ஆட்சியைக் கைப்பற்றிய போது பாடிஸ்டாவின் ஆதரவாளர்களையும் அவருக்கு விசுவாசமானவர்களையும் கடுமையாக நடத்தினார் இவர்களைத் தேடி ஃபிடல் காஸ்டோவின் படைகள் வீடுவீடாக வேட்டை நடத்திய போது பலர் மூர்க்கத்தனமாக கொல்லப்பட்டார்கள் இந்த அடக்கு முறையையும் கொலைகளையும் அப்போது அமெரிக்கா கடுமையாக எதிர்த்தது
இன்னொரு பக்கம் புதிதாக ஆட்சப்பொறுப்பேற்ற ஃபிடல் காஸ்டோ அமெரிக்கர்கள் கீயூபாவில் நடத்தி வந்த அத்தனை சக்கரைத் தொழிற்சாளைகலையும் வர்த்தக நடவடிக்கைகளையும் அரசுடமையாக்கினார் இதற்க்கு பதிலடி பொடுக்க அமெரிக்கா இனி கீயூபாவில் இருந்து சக்கரையை இறக்குமதி செய்ய மாட்டோம் என்று அறிவித்திருந்தது கீயூபாவைப் பொறுத்தவரை சக்கரை ஏற்றுமதிதான் அதன் சுவாசக்காற்றே இந்தச் சமயம் நான் உனது சக்கரையை வாங்கிக் கொள்கிறேன் என்று ரஷ்யா ஆபத்பாந்தவானாக முன் வந்தது அத்துடன் புதிய கனரக தொழிற்சாலைகள் அமைக்கும் கீயூபாவுக்கு ரஷ்யா பெரும் உதவி புரிந்தது